காஜியாபாத், ஆக.29-
பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசை எதிர்த்துப் போராட ஒன்றிணைவோம் என உத்தரப்பிரதேசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் அறைகூவல் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே லோனியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய சிறப்பு மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிருந்தா காரத் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.
மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில், “உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் “இரட்டை எஞ்சின் அரசு, தனது இரட்டை வேடத்தால் முஸ்லிம் வியாபாரிகள், ஹோட்டல் உரிமை யாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு தொடர்ச்சியாக இழைத்து வரும் அநீதியை எதிர்த்துப் போராட ஒன்றி ணைவோம் என்று அறைகூவல் விடுத்தார். மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தைக் கூறி கோழி இறைச்சிக் கடை, சமைத்து விற்கப்படும் இறைச்சிக் கடைகள், முட்டை கடைகள், ஹோட்டல் கள் என அனைத்துக் கடைகளும் வாரக்கணக் கில் தன்னிச்சையாக மூடப்படுகின்றன. முஸ்லிம்கள் இயக்கும் இ-ரிக்ஷாக்கள் கூட உ.பி. காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப் படுகின்றன. இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நிதி கூட மறுக்கப்படுகிறது” எனவும் குற்றம்சாட்டினார்
. மாநாட்டுக்கே வந்து கோரிக்கை மனு பெற்ற துணை ஆட்சியர்
இதனிடையே, மாநாடு நடக்கும் பகுதிக்கே நேரில் வருகை தந்த காஜியாபாத் துணை ஆட்சியரிடம் முஸ்லிம் மக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி பிருந்தா காரத் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆட்சியர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.